தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி, பா.ஜ,விலிருந்து விலகியுள்ளார்.
தெலுங்கானா சட்ட சபை தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை விஜயசாந்தி, பா.ஜ.வில் இருந்து விலகியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் அவர் கட்சியிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவர், 2009ல் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சியில் இணைந்து, மேடக் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பின்னர் அவருடனான கருத்து வேறுபாட்டால், 2020ல் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தார். தற்போது பா.ஜ.விலிருந்து விலகியுள்ள அவர், காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அக்கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.