தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளிலும் கூட பெரிதாகக் கலந்து கொள்வதில்லை. இதற்கிடையே இப்போது உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் உடல்நிலையைப் பரிசோதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
![தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீரென தனியார் மருத்துவமனையில் அனுமதி](https://uthayannews.ca/wp-content/uploads/2023/08/Vijayakanth.jpg)