மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபட்டார். பக்தர்களுடன் கலந்துரையாடினார். சமீபத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்த 22 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு நாட்டு படகு மீனவர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நன்றி தெரிவித்தனர்.