தேமுதிக தலைவர் விஜயகாந்த் மார்புசளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், விஜயகாந்துக்கு 3வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் விஜயகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது…