நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறை திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் நெல்லையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும் , நகரின் முக்கிய பகுதிகளிலும் மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இந்த சோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.