திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 605 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலையில் 466 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மாலை மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 139 பேரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.அதன் அடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மற்றும் அவரது மகள் உட்பட மொத்தமாக 708 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் 101 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது