கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கத்தில் கடந்த சில தனங்களுக்கு முன்பு ஜேசிபி வாகனம் மோதி பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக முக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஜேசிபி வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்பது தெரிய வந்தது. போலீசார் சம்பந்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றினர். தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தனர்.
இந்த கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஜேசிபி வாகனம் போலீஸ் நிலையத்திலிருந்து திடீரென மாயமானது. இது குறித்து நடத்திய விசாரணையில் முக்கம் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் உதவியுடன் வாகனத்தின் உரிமையாளர் அதை கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் ஜேசிபி வாகனத்தின் உரிமையாளர், அவரது மகன் உள்பட 6 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்-
நவுஷாத் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.