பரந்தன் உமையாள்புரம் பகுதியிலுள்ள வனவளத் திணைக்களத்தினால் இன்று அடாத்தாக எல்லையிடும் முயற்சியில் வனவளத் திணைக்களத்தினர் எல்லைகற்கள் அளவீடு செய்வதற்காக எல்லைகற்கள் இறக்கப்பட்டுள்ளதை கண்டித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
300 ஏக்கருக்கு மேல் வீஸ்தீரணமுடைய காணிகளையே 30 வருடங்களாக இவ் வயல்கனிகளில் விவசாயம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தட்போது வனவளத்திணைக்களத்தினர் இவ்வாறான தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் இதை கண்டித்தே போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் வருகை தந்து இவ் விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதோடு தற்போது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் இவ்வாறு ஒன்றுகூடுவது தவறு என்று கோரியதுடன் நாங்கள் இக்காணி தொடர்பாக உரிய திணைக்களத்துடன் கதைத்து தற்கலிகமாக நிறுத்துமாறு தெரியப்படுத்துகின்றோம் என தெரிவித்த பின்னர் அவ்விடத்தை விட்டு கலைந்துசென்றார்கள்.