தென்காசி அருகே சிமெண்ட் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புளியங்குடியை சேர்ந்த 6 பேர் பலி யானர்கள்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ்,மற்றும் ஒருவர் என ஆறு பேர் ஜன. 27 இரவு காரில் குற்றாலத்திற்கு குளிக்கச்சென்றனர்.
குற்றாலத்தில் குளித்துவிட்டு இனறு அதிகாலை 3.30 மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப் பொழுது புளியங்குடி அருகில் உள்ள சிங்கிலிப்பட்டிற்கும் புன்னையாபுரத்திற்கு இடையை ஓட்டுநர் கண் அயர்ந்து விட்டார்.. இதில் எதிர்பாராத விதமாக கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியதில் கார் மீது லாரி ஏரி இறங்கியது .
இதில் காரில் இருந்த ஆறு நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.ஒருவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையில் அவரும் பரிதாபமாக பலியானார்.
அதிகாலை நடந்த இந்த கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினரும்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரும் ,ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரை மணி நேரமாக கடுமையாக போராடி காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கே முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
புளியங்குடி பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் கலந்து கொண்ட இந்த ஆறு பேரும் காரில் குற்றாலம் சென்று விட்டு திரும்பும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.