சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன்இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார். இருவரும் 4ஆம் தேதி பிற்பகல் காசா நகரில் இருந்து சிம்லாநோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். உள்ளூரைச் சேர்ந்த தன்ஜின் காரை ஓட்டினார். சட்லஜ் நதி வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 200 மீட்டர் ஆழத்தில் விழுந்துவிபத்துக்குள்ளானது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் மீட்கப்பட்டபோதும், வெற்றி துரைசாமியும், ஓட்டுநர் தன்ஜினும்மாயமாகினர். இதில் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக வெற்றி துரைசாமியை தேடும்பணியில் சிக்கல் நிலவி வருகிறது. தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு கோடிரூபாய் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்தார்.
இந்த தகவலை, அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் காவல்துறைக்கு சைதை துரைசாமிவேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், வெற்றி துரைசாமியை தேடும் போது, சட்லஜ் ஆற்றங்கரை ஓரம் கிடந்த பாறை ஒன்றில் மனிதஉடற்பாகம்(மூளை) கிடைத்ததாக ஹிமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன வெற்றிதுரைசாமி உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதை மீட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காகதடயவியல் நிபுணர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.
மூன்று நாட்களாக சிட்லஜ் நதியில் தீவிரமாக வெற்றி துரைசாமியை தேடி வருவதாகவும் ஹிமாச்சல பிரதேசபோலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.