சென்னைக்கு வரும் 10ஆம் தேதி இரவு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, 11ஆம் தேதி சென்னையில் அண்ணாமலையுடன் பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும்பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை தரப்பில் பாத யாத்திரைக்கு அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை சோழிங்கநல்லூரில் நடத்த பாஜகவினர் அனுமதிகேட்டிருந்தனர். எனினும், அங்கே கூட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. பெருங்குடி அல்லது நந்தனம்ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால்காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை ஷெனாய் நகரில் உள்ள பள்ளிஒன்றின் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதிகிடைத்தால் அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றுபாஜகவிற்கு ஆதரவு திரட்டிவிட்டு விழா மேடைக்கு ஜெ.பி.நட்டா செல்வார் என சொல்லப்படுகிறது. வரும்11ஆம் தேதி காலை காட்டாங்குளத்தூரில், பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் நட்டா ஆலோசனையும்நடத்த உள்ளார்.