2024 மக்களவைத் தேர்தல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 91.20 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை 6% அதிகரித்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், நாடு முழுவதும் 2.53 கோடி புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்ச ம் பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டன என்றார்.