மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக பரப்புரையைத் தொடங்கியிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து வேலைகளைத் தொடங்கியுள்ளது.
அதேவேளையில் தேர்தல் பரப்புரையையும் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
இந்தியா வெல்லும்
“மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். இந்தியா வெல்லும்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.