தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டு சென்றார். டில்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் ஆளுனர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்தார். என்றபோதிலும் ஆளுனர் உரை அப்படியே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர் பேசிய சில கருத்துகள் நீக்கப்பட்டன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி சென்றுள்ளார்.