சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவருடைய சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்ததை நினைவு கூறும் விதமாக கலைஞர் கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.
இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26- ந் தேதி திறந்து வைக்கிறார்.