உண்மையில் முள்ளிவாய்க்காலில் என்ன தான் நடந்தது? பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் யாராவது ஒருவரைப்போட்டு குடையும் கேள்வியிது.
ஆர்மேனிய, ருவாண்டா, அல்பானிய – கொசோவா, ரோகிங்கிய இனப்படுகொலைகள் போன்று தமிழினப் படுகொலையும் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது.
இது பரந்த தளத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது. இனப்படுகொலையை நடத்தியவர்களுக்குத் தண்டனையும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியும் கிடைக்க வேண்டுமென இன்று வரை பல தளங்களில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் வரை சென்ற அனைவருக்கும் தனித் தனிக் கதைகள் உண்டு. அந்தவகையில் ஈழநாதம் நாளிதழில் அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றிய சுரேன் கார்த்திகேசு அவர்கள் போரின் சாட்சியாக இருந்து தன் முன்னே நடைபெற்ற சம்பவங்களை எழுதியததோடு மட்டுமில்லாமல் தான் எடுத்த படங்களையும் ஒளிப்பட ஆதாரமாக இணைத்து (பல படங்கள் இதுவரை வெளிவரவில்லை) “போரின் சாட்சியம்” எனும் பெயரில் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார்.
நாங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு நல்ல வேலை இந்த நூலை வாங்கி நம் அடுத்த தலைமுறைகளின் கைகளுக்கு தருவதே. காரணம் 2009 இற்குப்பிறகு முள்ளிவாய்க்கால் சார்ந்து வரும் மிகக் காத்திரமான ஆவணப் படைப்பாக இந்நூல் இருக்கும்.
நூல் வெளியீடு காணும் அரங்கு :
Pfarrei St. Karl
Spitalstrasse 93
6004 Luzern.
▪நாள் : 12.05.2024
▪நேரம் : மாலை நான்கு மணி.
▪சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம்.