டில்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை டில்லி முன்னாள் துணை அமைச்சர் மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது. இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து, எட்டுமுறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சம்மனை ஏற்று கெஜ்ரிவால் ஒருமுறை கூட ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார். இதற்கிடையே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று கெஜ்ரிவால் நேரில் ஆஜரானர். கெஜ்ரிவால் ஆஜரானதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/03/Arvind-kejriwal-bail.jpg)