கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கும் அவருக்கு கடும்போட்டி நிலவிய நிலையில், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தருமபுரியில் வென்றார். 5,04,235 வாக்குகள் பெற்று அன்புமணி தோல்வியை சந்தித்தார்.
எனினும், அதிமுக உடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்று நாடாளுமன்றம் சென்றார். இம்முறை மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணி களமிறங்கலாம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
அனால் அவருடைய மனைவி அன்பு மணி சவுமியா தர்மபுரியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி வேட்பாளர் அரசாங்கம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலையில் வெளியான அறிவிப்பின்படி, தர்மபுரி வேட்பாளர் அன்புமணி சவுமியா என்று தெரிவிக்கப்பட்டது.