தமிழகத்தில் 90 சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ் பேரின மக்களிடையே தொடர்ந்து அநீதி, முறையற்ற லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவை நடைபெற்று தொடர்ச்சியாகச் சகித்துக் கொள்வதன் மூலம் அடிமை இனம் உருவாகி வருகிறது. தெரு தெருவாக வாக்கு சேகரித்து வருகிறோம்.
ஆனால் மற்ற கட்சிகள் இரண்டு நாளில் தேர்தலுக்கு முன்பு வீட்டு வீட்டுக்குச் சென்று வாக்குக்குக் காசு கொடுக்கிறார்கள். இதனை மக்கள் புறக்கணிக்கும் போது தான் தமிழ் மக்கள் வாழ்க்கை உயரும். படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் அரசு வேலை என்பது தான் நாம் தமிழர் கட்சி கொள்கை. பட்டு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு போன்ற வேளாண்மை பணிகள் அரசு பணிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் 28சதவீதம் பேர் இரவு உணவு இல்லாமல் தூங்க செல்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி கொள்கைகளை கேரள அரசு பின்பற்றி வருகிறது. மனித உடல் திறனை உற்பத்தியில் முழுமையாக ஈடுப்படுத்தும் நாடு தான் வளரும். உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்குக் காசு கொடுத்து கூட்டம் வரவழைக்கப்பட்டு வருகிறது. வது அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி வந்ததுக்கு மக்களாகிய உங்கள் ஆதரவு தான். எதற்கு பாஜக வாக்களிக்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள் பார்ப்போம். தமிழ்நாடு என்று பெயர் உள்ளது ஆனால் தமிழில் எந்த பெயரும் இல்லை. நாம் தமிழ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மது கடைகள் மூடி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழ் நிலம் பறிபோய் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் வேலை செய்வது தவறு இல்லை.
குடியுரிமை வழங்குவதைத் தான் எதிர்க்கிறோம். காங்கிரஸ், பாஜக அதிமுக திமுக ஆகிய கட்சிகள் தான் மக்கள் நிலை இந்த நிலைமை உள்ளது. மாற்று என்று மட்டுமே மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் மாற்றத்தை முழுமையாகத் தேடுவதில்லை. அதிலும் அதிமுக மாற்று திமுக காங்கிரஸ் மாற்று பாஜக என்று மட்டுமே மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே இருந்தால் மக்கள் வாழ்க்கை நிலை இப்படி தான் இருக்கும் மாற்ற முடியாது. தமிழகத்தில் 90சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.