அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அம்மாநிலத்துக்கு ஜங்னான் என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறது. ஆனால், அருணாச்சலப்பிரதேச மாநிலம் இந்தியாவினுடைய பகுதி என இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இருப்பினும், இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்னை நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதும், எல்லையோரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதும் என சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதசே மாநில எல்லையோரம் மேலும் 175 கிராமங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.