இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹினியாக்கின் 3 மகன்கள், பேர குழந்தைகள் பலியாயினர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த ஆறு மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இப்போரில் 33,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹினியாக். இவர் நாட்டை விட்டு வெளியேறி கத்தாரில் உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் பேர குழந்தைகள் உள்ளனர். இவர்கள் காசா பகுதியில் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இங்கு இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியதில் அனைவருமே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இஸ்மாயில் ஹினியாக்கும் உறுதி செய்துள்ளார்.