இன்னும் எத்தனை நாட்கள் காங்கிரசை விமர்சனம் செய்வீர்கள்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ராம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: காங்கிரசை இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் விமர்சனம் செய்வீர்கள். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லை. 10 ஆண்டுகளாக முழு பெரும்பான்மையுடன் உள்ள பா.ஜ. இம்முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனக்கூறுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக நாட்டில் எந்தப் பணியும் செய்யவில்லை என்கின்றனர். அப்படி எதுவும் செய்யவில்லை என்றால், ஐஐடி, ஐஐஎம் மற்றும் எய்ம்ஸ் ஆகியவை எப்படி வந்து இருக்கும். சந்திரயான் விண்கலம் விண்ணில் இறங்கி சாதனை படைத்து உள்ளது. முதல் பிரதமர் நேரு கட்டமைக்கவில்லை என்றால், இது எப்படி சாத்தியம் ஆகியிருக்கும். இவ்வாறு பிரியங்கா பேசினார்.