இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகிய ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாலா தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் திரைப்படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர்கள் மிஷ்கின், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘வணங்கான்’ படத்தில் கதையின் நாயகனாக அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி திரைப்படம் வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.