தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழக தலைவரான பின் விஜய் செலுத்தும் முதல் வாக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அனைவரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள் என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.