சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை 3’. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் நடித்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய 3 பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இதன் ‘முன்னோட்டம்’ வெளியிடப்பட்டது. இந்நிலையில் விஷாலின் ‘ரத்னம்’ படத்திற்கு வழிவிடும் வகையில் சுந்தர்.சி யின் ‘அரண்மனை-4’ படம் ஒரு வாரம் தள்ளி வெளியிட சுந்தர். சி முடிவு செய்து உள்ளார் அதன்படி வருகிற மே. 3 -ந்தேதி அரண்மனை – 4 படம் திரையரங்குகளில் ‘வெளியீடு செய்யப்படும் என சுந்தர்.சி அறிவித்து உள்ளார்.