மத்திய ஆப்ரிக்காவில் ஆற்றில் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய ஆப்ரிக்காவில் தலைநகரான பாங்குயில் வசிக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஆற்றை கடந்தால் தான் செல்ல முடியும். இந்நிலையில் இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு செல்ல, படகில் சுமார் 300 பேர் ஆற்றை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி, 58 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 200க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த, மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர். நிலைமையை உணர்ந்த உள்ளூர் மீனவர்கள் தங்கள் படகுகள் மூலம் மீட்பு பணியில் களம் இறங்கினர். விபத்தில் சிக்கியவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. படகு கவிழ்ந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.