2024ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மற்றும் மாஸ்டர் ஆஃப் என்டர்டெயின்மென்ட் படமாக அரண்மனை 4 இருக்கும் என குஷ்பூ சுந்தர் தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அனைத்து பாகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் தான் அரண்மனை 4 . சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் சுந்தர் சி-க்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மேலும், இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் .இதுவரை உலகளவில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது