கிளிநொச்சி – நாச்சிக்குடாவில் கடற்தொழிலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாச்சிக்குடா கடல்பரப்பில் களங்கட்டி பணியில் நேற்று ஈடுபட்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த நபர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வந்ததுடன் முழங்காவில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய எம்.யோனகன் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் 3 மாத குழந்தையின் தந்தையாவார்.