நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் சுகாதாரப் பாதுகாப்புமிக்க வகையில் செயற்படுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தீபாவளித் தினத்தன்று கேளிக்கைகளையும் நடமாட்டங்களையும் தவிர்த்துக் கொண்டு எளிமையாகபண்டிகையைக் கொண்டாடுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மலையக பெருந்தோட்ட மக்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போது .இந்த மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றிய 50 பேர் இனங்காணப்பட்டனர். இவர்களில் 40 பேர்பெருந்தோட்டங்களை சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டினார்.
தோட்டத் தொழிலாளர்கள் நெருக்கமாக வாழும் லயன் குடியிருப்புகளில் எவருக்கேனும் வைரஸ் தொற்றினால் அது வேகமாக பரவும் சாத்தியம் உள்ளது. எனவே கூடுதலான ஆட்கள் ஒன்றுகூடும் வகையிலானகொண்டாட்டங்களைத் தவிர்த்து சமய கிரியைகளுக்கு முக்கியத்துவம் அளித்து முடிந்தவரை வீடுகளில் தங்கியிருக்க வேண்டும். கோயில் பூஜைகளில் கூடுதலான அடியார்கள் கலந்து கொள்ள இடமளிக்கவேண்டாமென ஆலய நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வேலை செய்யும் இளைஞர் யுவதிகள் தீபாவளிக்காக ஊர் திரும்புவதைமுடிந்தவரை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுபான விற்பனைநிலையங்களை மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளிடமும் கேட்கப்பட்டுள்ளது. அது பற்றி அவரேதீர்மானிக்க வேண்டுமென நுவரெலியா மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.