போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறைக் கைதிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலை ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் 800இற்கும் அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன