தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இன்று மாலை தனது இல்லத்தின் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞசலி செலுத்தினார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர் என தீபமேற்றிய பின்னர் கருத்து வெளியிட்ட அவா் கூறினார்.