மட்டக்களப்பு- வாழைச்சேனையில் ஊடகவியலாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோகுலதாசன் என்ற ஊடகவியலாளர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.