ஜெனிவா யதார்த்தம் என்பது சுமந்திரன் எனும் ஒரு தனி நாடாளுமன்ற உறுப்பினர் கையாளும் விடையம் அல்ல என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமின்றி கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட ஜெனிவா விவகாரத்தில் சுமந்திரன் மீது குற்றச்சாட்டுகளை முன்னைக்கின்றார்கள் எனவும், நிலாந்தன் மேலும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.