(மன்னார் நிருபர்)
(30-12-2020)
மன்னார் மாவட்டத்தில் மண்வாசனை அமைப்பினுடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் புதன் கிழமை (30) காலை மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
-கனடாவில் வசிக்கும் ரட்ணராஜா முகிலன் வயது-12 என்ற சிறுவனின் பிறந்த நாளை முன்னிட்டு மண் வாசனை அமைப்பினூடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேரூக்கு குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
-குறித்த கற்றல் உபகரணங்களை மண்வாசனை அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சாகயம் வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.