தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் கொரோனா காரணமான முடக்க நிலையில், சாதாரண மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் சிறுவர் சிறுமியர் உணவுக்கு திண்டாடும் நிலையேற்பட்டுள்ளது. பணம் இருந்தாலும் வெளியில் சென்று அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களை வாங்கி வருவதற்கு தடை யேற்பட்டுள்ளது.
இதற்கமைய கனடாவில் இயங்கும் ‘ரொறன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பெற்ற வேண்டுகோளிற்கு இணங்க கனடாவின் BisRing நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு அகிலனின் பங்களிப்போடு திருகோணமலை சீனன்குடா கிராம மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பெற்றன.
இந்த உடனடி உதவிப் பணிக்கு, அதே கிராமத்தில் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருபவரும் ‘விடியல்’மற்றும் ‘தாயக விருட்சம்’ ஆகிய அமைப்புக்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் திருமதி தவமலர் கோணேஸ்வரநாதன் ஊடாக இந்த உதவிப் பணி மேற்கொள்ளப்பட்டது.
சில நாட்களுக்கு முன்னர் திருகோணமலை சீனன் குடா கிராமத்தில் உதவிகள் தேவைப்பட்ட சுமார் 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பெற்றன.
பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் கனடா கனடாவின் BisRing நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு அகிலனின் பங்களிப்பிற்கும் இந்த பணிக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுத்த ‘ரொரன்ரொ மனித நேயக் குரல் ‘ அமைப்பிற்கும் நன்றி தெரிவிதுள்ளனர்