அதிபர் செல்வி. சாந்தினி மாணிக்கம் தலைமை உரையிலே இவ்விரண்டு Smart board உம் எமது மாணவர்களின்; கல்வியிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சிறக்க உதவும் என்பதில் ஐயமில்லை. இத்திறன் வகுப்பறைகள் மாணவரின் சுய கற்றலையும் தேடி அறியும் ஆற்றலையும் மேம்படுத்தும் என்பதோடு இதனை தந்து உதவிய Dr. ச. ஜோதிலிங்கம் திருமதி. இ. ஜோதிலிங்கம, Dr. இ. நித்தியானந்தன் ரத்னம் அறக்கட்டளை நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை பாடசாலை சமூகம் சார்பில் தெரிவித்துக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர் திரு. நாகலிங்கம் சிவநேசன் உரையில் இப் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட திறன் வகுப்பறை மாணவரை நவீன முறையில் வளர்த்தெடுக்க உதவும் எனவும், சிறந்த செயற்பாட்டுக்கு காரணமாக அமைந்த பெருமக்களான அன்பு உள்ளங்களை மனமார பாராட்டுவதாக தெரிவித்தார் அத்துடன் 2016இல் அதிபர் பதவியேற்றதன் பின் ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் தமிழ் ஆங்கில போட்டிகளில் பல தேசிய மட்டங்களை பெற்றதுடன் குறிப்பாக தரம் 5 பரீட்சையிலும் 2021 இல் திறன் வகுப்பறை மூலம் எதிர்பாராத பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஈ. சரவணபவன் அவரின் உரையின்போது இப்பாடசாலைக்கு திறன் வகுப்பறையை ஒழுங்கமைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைவதாக கூறினார்.
தொடர்ந்து Dr. ச. ஜோதிலிங்கம் அவர்கள் இப்பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில் தானும் தனது மனைவியும் உதவுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அத்துடன்; மாணவரின் செயற்பாடுகள் குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்;.
மாணவரின் தமிழ், ஆங்கில பேச்சுக்களும் Smart board கற்பித்தல் விளக்கம் (Presentation) நிகழ்த்தப்பட்டமைக்கு வாழ்த்துக் கூறி இப்பிள்ளைகள் சமூகத்தில் பெரும் சிறப்பு மிக்கவர்களாக திகழ்வார்கள் என வாழ்த்தினார்.
இவ் விழாவிற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தனர்.