பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை சில பெண்கள் அணியாமல் ஆண்களுடன் பழகுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தாலிபான்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை ஹெராத் மாகாணத்தில் மட்டும் விதித்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாகப் பெண்களுக்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
6 ஆம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பல்கலைக்கழகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வேலைக்குச் செல்லக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்த நிலையில் மேற்கத்திய இசைகள், மேற்கத்தியத் தொலைக்காட்சி நாடகங்களுக்கும் தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். சில வகை வீடியோ கேம்களை குழந்தைகள் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், புல்வெளிகளுடன் கூடிய உணவகங்களுக்குப் பெண்கள் தனியாகவோ, குடும்பத்துடனோ செல்லக் கூடாது எனத் தாலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளனர்.