இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15-ம் தேதி வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படம் இந்தியில் மறுபதிப்பு செய்யப்பட்டு 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதனிடையே மகாராஷ்டிராவில் இப்படத்தின் பின்னணி மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் கேட்டதாகவும் படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாக கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு திரைப்பட துறையினரிடம் மட்டுமின்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தணிக்கை துறை அதிகாரிகள் லஞ்ச புகாருக்கு உள்ளானது துரதிர்ஷ்டவசமானது. மும்பையில் உள்ள அதிகாரிகளை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.