அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் (18.1.2024 – வியாழக் கிழமை), கனடா நாட்டில் உள்ள ஒன்றாரியோ மாகாணத்தின் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் சமூக சேவைகள் துணை அமைச்சின் பாராளுமன்றச் செயலாளரும் மாகாணஅரசின் உறுப்பினருமான லோகன் கணபதி அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். அப்போது, ஒன்றாரியோ மாகாணத்தின் கௌரவ இலச்சினையை கழகப் பொதுச் செயலாளருக்கு அணிவித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மு. சிவாஜிலிங்கம், பத்திரிகையாளர் சண் மாஸ்டர் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.