– யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அறிவிப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உயர் திருவிழாவானது, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அவர்களது ஒருங்கிணைப்பின் கீழ், ஆயர் இல்லம் யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23,24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு எற்பாடு கள் முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஊடக அறிக்கை மூலம் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2024.02.23 ஆந் திகதி காலை 5.00 மணி தொடக்கம் மு.ப 10.00 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும். கச்சதீவுக் கான படகுச் சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 2024.02.23 ஆந் திகதி காலை 5.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயண கட்டணம் ரூ.1500 ஆகும்.வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 2024.02.23 ஆந் திகதி 6.00 முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடு களுடன் வருகைதருதல் வேண்டும்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர் களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப் பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது – என்று தெரிவித்துள்ளார்.