வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்ற துடிப்புடன் ஓரணியில்திரண்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தங்கள் நிலையிலிருந்துபின்வாங்கிவருகின்றன. ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்றுஅறிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, 42 தொகுதிகளிலும் நாங்களே போட்டியிடுவோம் என்று அறிவித்துவிட்டார்.
அதேபோல, காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி, பஞ்சாப்மாநிலத் தலைவர்கள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். அதையும் மீறி, ‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி இணைந்தது. ஆனால், தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பஞ்சாப்பில்அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார்முதல்வர் பகவந்த் மான்.
அதை உறுதிசெய்யும் வகையில், பஞ்சாப்பிலுள்ள 13 தொகுதிகளிலும் சண்டிகரில் ஒரு தொகுதியிலும்ஆம் ஆத்மி போட்டியிடும் என்று அறிவித்த அந்தக் கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால், டெல்லியிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களேபோட்டியிடுவார்கள் என்று தற்போது அறிவித்திருக்கிறார் டெல்லியிலாவது ஆம் ஆத்மிக்கும்காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு நடைபெறலாம் என்று காங்கிரஸாரிடைய இருந்தகொஞ்சநஞ்ச நம்பிக்கையும் அற்றுப்போய்விட்டது.
தேசியத் தலைநகரான டெல்லியில் அனைத்து இடங்களிலும் ஆம் ஆத்மியே வெல்லும்’ என்றுகூறியிருக்கிறார் கெஜ்ரிவால். பா.ஜ.க எதிர்ப்பைப் போலவே, காங்கிரஸ் எதிர்ப்பையும் ஆம் ஆத்மிகடைப்பிடித்துவந்ததால், ‘இந்தியா’ கூட்டணியில் சேருவதற்கு தொடக்கத்தில் கெஜ்ரிவால் தயக்கம்காட்டினார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டத்தில்பங்கேற்க வேண்டுமென்றால், டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுகொண்டுவரவிருந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்க வேண்டும் என்று நிபந்தனைவைத்தார் கெஜ்ரிவால். அதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்தால்தான், பாட்னா கூட்டத்தில்கலந்துகொள்வேன் என்றார் கெஜ்ரிவால். அது தொடர்பாக, காங்கிரஸும் உத்தரவாதம் அளித்தது. அதன்பிறகு நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டார்.
இன்றைக்கு, ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் டெல்லியிலும், பஞ்சாப்பிலும் காங்கிரஸுடன்தொகுதிப்பங்கீடு கிடையாது என்ற முடிவை கெஜ்ரிவால் எடுத்திருக்கிறார். மற்ற மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஓரளவு சுமூகமாக நடைபெற்றிருக்கிறது. 80 மக்களவைத்தொகுதிகளைக் கொண்ட உ.பி-யில் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்குவதாக சமாஜ்வாடிகட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். இதனை காங்கிரஸ் இன்னமும் ஏற்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
48 மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிராவிலும் உத்தவ் தாக்கரே தலைமையிலானசிவசேனா(உத்தவ் அணி), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் பிரிவு), காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளைக் கொண்ட கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைநிறைவுபெற்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், சில மாநிலங்களில் தொகுதிப்பங்கீடு இல்லாமல் தனித்தனியாகபோட்டியிடும் நிலை ஏற்பட்டிருந்தாலும், மற்ற மாநிலங்களில் தொகுதிப்பங்கீடு நடைபெறுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்றமுடிவுக்கு வந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியதுடன், 400 தொகுதிகளில் பொதுவேட்பாளர்களைநிறுத்தினால்தான், பா.ஜ.க-வின் தோல்வியை உறுதிசெய்ய முடியும் என்ற வியூகம் பற்றியும்விவாதிக்கப்பட்டது.
ஆனால், அதற்கு மேல் ‘இந்தியா’ கூட்டணி ‘செல்ஃப்’ எடுக்கவில்லை. மத்தியப்பிரதேச சட்டமன்றத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர்கள் கடைப்பிடித்த அதே அணுகுமுறையை, இப்போத, கெஜ்ரிவால்போன்ற மற்ற கட்சிகளின் தலைவர்கள் காட்டிவருகிறார்கள். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்றநோக்கம் பின்னால் போய், தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் தான் அதிகம் வெற்றி பெற வேண்டும் எனஎண்ணம் மேலோங்கிவிட்டது.
கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்று, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்குப் போகலாம் என்றதிட்டத்துடன், மம்தா போன்றவர்கள் தனித்துப்போட்டியிடுகிறார்கள். ஆனால், இவற்றில் எத்தனைகட்சிகள் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் இடம்பெறும் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க கூட்டணிக்கு தாவிவிட்டார். ‘இந்தியா’ கூட்டணியில்இருந்த ஆர்.எல்.டி-யும் பா.ஜ.க பக்கம் போய்விட்டது. இப்போதே இந்த நிலைமை என்றால், தேர்தலுக்குப் பிறகு எத்தனை பேர் இங்கே இருப்பார்கள் என்று தெரியவில்லை.
மேலும் `நாங்கள் தனித்தே போட்டியிடுவோம்’ என மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப்பில் திரிணாமூல்காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், அம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின்நிலைப்பாடு என்ன என்பதும் முக்கியமானது. தேர்தலுக்குப்பின் தங்களை ஆதரிப்பார்கள் என்றநம்பிக்கையில் அக்கட்சியால் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க முடியுமா என்பது சந்தேகமே. காரணம் அப்படியான முடிவு, அம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் ஆபத்தும் இருக்கிறது. சரி, களத்தில் சந்திபோம் என காங்கிரஸ் முடிவெடுத்தால், கூட்டணிகட்சிகளை எதிர்த்தும் அரசியல் செய்ய வேண்டிய நிலை வரும். இதுவும் பாஜக கூட்டணிக்கு சாதகமாகஅமைந்துவிடும். இவை அனைத்தையும் கடந்து இந்தியா கூட்டணி தேர்தலில் எந்த மாதிரியானதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.!