சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! என சிவனைக் குறித்துப் பாடும் பக்தர்களால் அனுட்டிக்கப்படும் விரதங்களில் சிவனின் இந்த விரதம் மகாசிவராத்திரி என அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த விரதத்தை நாள் முழுவதும் உபவாசம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து உள்ளன்போடு அனுட்டிக்கின்றனர். இத்தகைய பக்தியின் சம்பிரதாயம் தாம் தேடிய சிவனைச் சந்தித்து பலன் பெற்ற மனிதர் மீண்டும் துன்பம் வரும் போது தம் மனதில் ஏற்படுத்திய பதிவினால் உருவாக்கியதே ஆகும். தாம் தேடும் சிவனைச் சந்தித்து முத்தி பெறுவோம் என்ற நம்பிக்கையுடனேயே பக்தி செய்கின்றனர். அவ்வாறான இந்த சிவராத்திரி பக்தருக்கு கூறும் ஆன்மீக இரகசியங்கள் என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்.
மகா சிவராத்திரி
இன்றைய மனிதர் அறியாமையால் பஞ்சவிகாரங்களின் ஆதிக்கத்தில் பாவம் செய்பவர்களாகி துன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்நிலையில் சிவன் அவதரித்து அத்தீயகுணங்களிலிருந்து விடுவித்து மாறாக அன்பு அமைதி ஆனந்தம் நிறைந்த வாழ்வு வாழ வைப்பதால் இவ்விரதம் மகா சிவராத்திரி என்பதாயிற்று.
மூன்றாம் கண் விழித்தல்
கை கூப்பி வழிபடும் தம்மை மேன்மையாக்க தந்தையான கடவுள் வருவார் எனப் பாடினாலும் கூட அவர் பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் எனவும் எங்கும் இருக்கிறார் எனவும் அறியாமையுடன் கூறிக்கொண்டு இருப்பவர்களை மூன்றாம் கண் எனும் ஞானத்தை வழங்கி தெய்வீகபுத்தி எனும் அறிவுக்கண்ணை விழிப்படையச் செய்வதையே கண் விழித்தல் என்பதாகும்.
உபவாசம் அனுட்டித்தல
உபவாசம் என்பது அருகாமையில் வாசம் செய்தல் என்பதாகும். அதாவது சரீரம் எடுக்காதவரான பரமதந்தை சிவனை மனதால் நினைப்பதால் மட்டுமே அவரின் அருகாமையை அணுகவும் சக்தியை பெறுவதன் மூலம் துாய்மையாகவும் சக்திசாலியாகவும் ஆகமுடியும். இவ்வாறு மனதால் தந்தை சிவனுடன் கொள்ளும் தொடர்பே தியானம் எனப்படும். இறைவனை தேடினாலும் அவரை அறியாமல் அங்குமிங்கும் அலையும் குழந்தைகளுக்கு தியானத்தின் மூலமான வழிகாட்டலைக் கற்பத்து தூய்மையாக்கவே சிவனின் அவதாரம் நிகழ்கிறது. அந்த அவதாரத்தின் ஞாபகார்த்த சம்பிரதாயமே சிவராத்திரி ஆக கொண்டாடப்படுகிறது
சிவலிங்க வழிபாடு
5000 வருடங்கள் கொண்ட மனித ஆத்மாக்களின் வாழ்க்கைச்சக்கரத்தில் துன்பத்தின் அதிஉச்ச நேரமான இறுதி யுகமான கலியுக இறுதியில் ஒரேயொரு முறையே சிவன் அவதரிக்கிறார். தூய்மையாக்குகிறார். அதற்காக பிரம்மாவின் சரீர ஆதாரத்தைப் பெற்று மாற்றத்திற்கான கல்வியைக் கற்பிக்கின்றார். ஒவ்வொரு கல்ப்பத்திலும் தரும் இக்கல்வியை தந்தை சிவன் தற்போதும் வழங்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரம்மாவின் ஆதாரத்தை பெற்றதையே சிவலிங்கத்தின் அடிப்பகுதி பிரம்மாவையும் மேல்ப்பகுதியில் இருக்கும் ஒளிப்புள்ளியே சிவனைக் குறிப்பதாகவும் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் எல்லோரும் தாம் ஆத்மா என்பதை மறந்ததால் சிவன் யார்? என்பதையும் தியானத்தின் மூலமே தொடர்பைப் பெறமுடியும் என்பதையும் மறந்துவிட்டனர். அவரது நினைவு எனும் தியானமே நாம் பாவத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழியாகும்.
இராஐயோகம்
எல்லாப் புகழும் ஒருவருக்கே எனும் பெருமைக்குரியவரான அதிமேன்மையானவரான அதாவது இராஜவான சிவனுடன் தொடர்பு கொள்ளும் தியானமே இராஜயோகம் எனப்படுகிறது. மனஅமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் தரும் இத்தியானம் மனம் புத்தி மூலமாக தந்தை சிவனுடன் ஏற்படுத்தும் அன்பான நினைவேயாகும். தந்தையின் பிரம்மா மூலமாக 1936LD ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி உலகெங்குமுள்ள பிரம்மா குமாரிகள் ஆன்மீகப் பல்கலைக் கழகத்தினூடாக 136 க்கும் மேற்பட்ட நாடுகளில் 9000 க்கும் மேற்பட்ட நிலையங்களில் இலவசமாக கற்பிக்கப்படுகிறது.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான இத்தியானக்கல்விக்கான மேலதிக விபரங்களுக்கும் தியானத்தை பயில விரும்புவோரும் தொடர்புக்கான
இலக்கம் 416-439-9001
ஓம் சாந்தி
திருமதி. ஞானா. தனபாலசுந்தரம்
பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக் கழகம்
ஸ்காபறோ கிளை