அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு
“அரசியலமைப்பு நெறிமுறைக்கு எதிராக செயல்படுவது” என்பதை தனது அடிப்படை கொள்கையாகவே கொண்டிருக்கிறார், தமிழக கவர்னர்.
பதவிப்பிரமாணம் செய்ய மறுப்பது, அரசு தயாரிக்கும் கவர்னர் உரையை படிக்காமல் செல்வது, மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பானவற்றை கவர்னர் தொடர்ந்து செய்து வருகிறார்.
இவை “திருடக்கூடாது” என்பது “இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது” என்று சொல்வது போல் உள்ளது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.