கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
திருவள்ளூர் (தனி) – பொன்.பாலகணபதி
வட சென்னை – பால் கனகராஜ்
திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்
நாமக்கல்ல் – கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம்
பொள்ளாச்சி – கே.வசந்தராஜன்
கரூர் – வி.வி.செந்தில்நாதன்
சிதம்பரம் (தனி) – பி.கார்த்தியாயினி
நாகப்பட்டினம் (தனி) – எஸ்ஜிஎம் ரமேஷ்
தஞ்சாவூர் – எம்.முருகானந்தம்
சிவகங்கை – தேவநாதன் யாதவ்
மதுரை – இராம சீனிவாசன்
விருதுநகர் – ராதிகா சரத்குமார்
தென்காசி (தனி) – ஜான் பாண்டியன்
புதுச்சேரி – நமச்சிவாயம்
இதில், தாமரை சின்னத்தில் 4 கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் 23 தொகுதிகளில் தாமரை சின்னத்திலும், 16 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் அவர்களது சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கிடைக்கப் பெறும். இத்தொகுதியில் 1991-ம் ஆண்டு முதல் பாஜக சார்பில் தொடர்ச்சியாக பொன். ராதா கிருஷ்ணன் போட்டியிடுகிறார். தொடர்ச்சியாக 9 முறை சந்தித்த மக்களவை தேர்தலில் 1999, 2014-ம் ஆண்டுகளில் இருமுறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சர் ஆனார். இதில் 7 முறை அவர் தோல்வியடைந்தார்.
தற்போது 72 வயதான நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைமை வாய்ப் பளித்து அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். காங்கிரஸ் சார்பில் இங்கு மீண்டும் விஜய் வசந்த் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் பாஜக சார்பில் களம் இறங்குவதால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.. பொன் ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம். திருமணமாகாத இவர் இந்து நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.