எதிர்வரும் 5,6,7 ஆம் திகதிகளில் சிக்காக்காக்கோ நகரில் இடம்பெறுகின்றது. உலகின் பலபாகங்களில் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொண்டு கட்டுரைகளை சமர்ப்பிக்க உள்ளன. இம்மகாநாட்டில் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் சொலமன் பப்பையா, பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேம்பன் உட்பட கல்வேறு பிரபலங்களோடு முக்கிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் கலந்துகொள்கின்றார்கள்.
உலகெங்கிலிருந்தும் இருந்து திருக்குறள்பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளதோடு பல கட்டுரைகள் மாநாட்டில் ஆய்வறிஞர்களால் முன்னிலைப்படுத்தப்படவும் உள்ளன. கனடாவில் இருந்து முன்னைநாள் பேராசிரியர் கலாநிதி நா.,சுப்பிரமணியன், கலாநிதி திருமதி கௌசல்யா சுப்பிரமணியன், கலாநிதி திருமதி செல்வம் ஶ்ரீதாஸ், திரு. சின்னையா சிவனேசன், திரு. த. சிவபாலு, திரு. குமார் புனிதவேல் ஆகியோரின் 7 கட்டுரைகள் மகாநாட்டில் சமர்ப்பிக்கபடத் தேர்வாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் திரு. த. சிவபாலுவின் வள்ளுவரின் சிந்தனைகளும் கனடாவின அரசியலமைப்பும், மகாகியவல்லியின் அரசயில் சிந்தனைகளும்வள்ளவரின் அரசியல் கோட்பாடுகளும் என்னும் இரு கட்டுரைகளும் இடம் பெறுகின்றது என அறியக்கிடக்கின்றது. திரு. சின்னையா சிவனேசன் மற்றும் திரு குமார் புனிதவேல் இருவரும் ஆங்கிலத்தில் தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக அரங்கில் திருக்குறளை எடுத்துச் செல்லவேண்டும் என்னும் உயரிய நோக்கில் உலக திருக்குறன் மகாநாட்டுக் குழு இதனை மேற்கொண்டுள்ளதோ, இந்த மூன்றுநாட்கள் இடம்பெறும் மாகாநாட்டில் மாணவர்களின் உரைகள், நாடகங்கள், இசை, நடன நிழ்ச்சிகளும்இடம்பெறவுள்ளன. கனடாவில் இருந்தும் இந்து மகாநாட்டில் கலந்துகொள்ள தமிழார்வலர்கள் செல்ல உள்ளார்கள்.
திருக்குறள் மகாநாடு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இடம்பெற உள்ள நற்செய்தியையும் திருக்குறள் மகாநாட்டுக் குழு அறிவித்துள்ளது.
பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச்– சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.
என சங்க இலக்கியப் புலவரான அரிசில் கிளார் பாடியிருப்பது வள்ளுவத்தின் சிறப்பை படம்பிடித்துக்காட்டுகின்றது. சுருங்கச் சொல்லி பல்வேறு கருத்தாளம் தொட்டவர்கள் வள்ளுடுவனைப்போல் யாரும் இல்லை என்பது பல்வேறு அறிஞர்களால் விதந்துரைக்ப்பட்டுள்ளது மட்டுமல்ல தமிழுக்கு சிறப்புத் தருவதாகவும் உள்ளது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு எனப் புகழ்ந்து பாடிய திருக்குறள் உலகெங்கும் பரந்து புகழ்க்கொடி நாட்டுவதற்கான முயற்சியை உலகத் திருக்குறள் மகாநாடுகள் கருப்பொருளாகக் கொண்டுள்ளன என்பது அதன் தொனிப்பொருளாக உள்ளது.