பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு வீடு தேடித் சென்று பாரத ரத்னா விருது வழங்கிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் நின்று கொண்டு இருந்தார். பிரதமர் அமர்ந்து இருந்தார்.
இதுபற்றி திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவில், “நம் இந்தியக் குடியரசுத் தலைவருக்குக் காட்டப்படும் அப்பட்டமான அவமரியாதையால் ஆழ்ந்த வருத்தம். பிஜேபி ஆட்சியின் கீழ், நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” என்று கூறியுள்ளார்.