தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சங்கரன்கோவில் தேரடி பகுதியில் பிரசவத்தில் ஈடுபட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இங்கு போட்டியிட்ட வடக்கு மாவட்ட செயலாளர் ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள். ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வந்த போது அப்போதைய முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை .ஆனால் அடிமை எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நீட் தேர்வை தமிழகத்தில் உள்ளே நுழைத்ததால் இன்று அனிதா, ஜெகதீசன் உள்ளிட்ட 22 பேர் இறந்துள்ளனர்
.தற்போது தமிழக முதல்வர் தலைவர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் நீட் தேர்வை அனுமதிக்க மாட்டோம்.
தமிழகத்தில் வெள்ளம் வந்த போது தமிழக வராத மோடி தற்போது அடிக்கடி வந்து கொண்டிருக்கிறார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இங்கே வீடு வாங்கி தங்கி இருந்தாலும் அவரால் தமிழ்நாட்டில் வாக்குகளை பெற முடியாது. தமிழக முதல்வரின் முத்தான பல திட்டங்களால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
வெள்ளம் வந்த காலத்தில் வீடு இழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் வீடு சேதமானவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் என சுமார் 1500 கோடி ரூபாய் வழங்கியவர் நமது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.
புதுமைப்பெண் திட்ட மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் சுமார் 4000 பெண் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை தாண்டியும் இந்தியாவிலேயே முதன் முதலில் 1 முதல் 5 வரை படிக்கும் பிள்ளைகள் பயனடையும் வகையில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை துவக்கி உள்ளார். இந்த திட்டம் தற்போது இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்திலும், அமெரிக்கா அருகில் உள்ள வளர்ச்சி பெற்ற நாடான கனடாவிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் சுமார் 22,000 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தரப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சம் ஆகும் .அதில் 1 கோடியே 18 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது . இத்தனை பெண்களுக்கு அவர்களின் உரிமைத் தொகை வழங்கிய தமிழக முதல்வர் மீதமுள்ளவர்களுக்கு வழங்காமல் இருப்பாரா . விரைவில் அனைவருக்கும் வழங்குவார்.
.தற்போது பிரதமர் மோடி அவர்களுக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன் .நீங்களும் பாஜக கட்சியினரிடம் சொல்லுங்கள் அவர் பெயர் 29 பைசா. நம்மிடமிருந்து வரி வாங்கிக்கொண்டு ரூபாய்க்கு 29 பைசா மட்டும் வழங்குகின்றார். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகின்றார். இப்படி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சுமார் 3லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.