40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
தூத்துக்குடி வேட்பாளரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் தூத்துக்குடி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசும் போது, “மின்னணு வாக்குப்பது இயந்திரத்தின் மீதான சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் அல்லது பழைய முறைப்படி வாக்குசீட்டு முறையை கொண்டு வர வேண்டும். நிச்சயமாக மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.