சென்னை, ஏப்.30-
பாவேந்தர் பாரதிதாசன் 134 வது பிறந்த நாளையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
“பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனைதிராவிடத்தின் குறியீடாகவும் ஆதியில் அடையாளப்படுத்தியவர்கள், காலப்போக்கில் பாரதியாரை காங்கிரஸ் குறியீடாகாவும் பாரதிதாசனை தி.மு.க குறியீடாகவும் சுருக்கிவிட்டனர்
காங்கிரசும் தி.மு.கவும் கூட்டணி கொண்டாடும் இந்தக் காலகட்டத்திலாவது இருபெருங் கவிஞர்களையும் மீண்டும் தேசிய திராவிடக் குறியீடுகளாக மேம்படுத்த வேண்டுகிறேன் இருவரும் கட்சி கடந்தவர்கள்; தத்துவங்களுக்குச் சொந்தமானவர்கள் பாவேந்தர் பிறந்தநாளில் இந்த இலக்கியக் கோணல் நிமிர்ந்து நேராகட்டும்.” இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.