1ஆம் தேதி அயோத்தியில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபடும் போது ராமர் சிலை பின்னே சிவப்புத் திரை இருந்தது. 2 நாள் முன்பு பிரதமர் மோடி வழிபடும் போது அதே ராமர்கோவிலில் வழிபடும்போது சிவப்புத திரை இல்லை. “எங்கே போனது அந்த சிவப்புத் திரை..?” என்று சமூக வலைத் தளங்களில் கேள்விகள் குவிந்து வருகின்றன.
இதுபற்றிய விமர்சனங்களில் ஒன்று பின்வருமாறு:-
“இந்த இரண்டு படங்களில் உள்ள வித்தியாசங்களை சிறு குழந்தை கூட கண்டு பிடித்து விடும்.
குடியரசுத் தலைவரை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்க மறுத்த மோடி அரசுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
அதனை சரி செய்ய தற்போது குடியரசு தலைவர் ராமரை வழிபடுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்து, அதிலும் படுதோல்வி அடைந்தது மோடி அரசு.
கோவில் திறப்பு விழாவில் மோடி வழிபாடு நடத்திய மூல விக்கிரகம் திரையிட்டு மறைக்கப்பட்ட நிலையில்,
குடியரசுத் தலைவர் வழிபடுவது ஒரு செட்டிங் விக்கிரகம் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
#எத்தனைகாலம்தான்_ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே…”
இவ்வாறு விமர்சிக்கப்பட்டு வருகிறது.